காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்

காதல் திருமணம் செய்த பெண்  மர்ம மரணம்
Updated on
1 min read

பரங்கிப்பேட்டை அருகே உள்ளசில்லாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பூமிகா (20). இவரும் குத்தாப் பாளையத்தைச் சேர்ந்த கோவிந் தனும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், வீட்டில் இருந்த பூமிகா நேற்று முன்தினம் திடீ ரென உயிரிழந்தார். அவர் தூக்குப் போட்டு தற்கொலை கொண்டதாக அவரது பெற் றோருக்கு கோவிந்தன் தகவல் தெரிவித்துள்ளார். இத்தகவல் அறிந்து பூமிகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தனது மகள் இறப்பில் சந்தே கம் இருப்பதாக பூமிகாவின் தாயார் பவானி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in