தொழிலதிபர் வீட்டில் கொள்ளை

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை
Updated on
1 min read

வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந் தவர் சசிகக்குமார் (34). இவர் செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

தற்போது சசிகுமார் குடும்பத்து டன் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சசிகுமார் தனதுகுடும்பத்தினருடன் ஒரு அறையில் தூங்கினார். இன்னொரு அறை யில் அவரது தாய் லலிதா தூங்கி னார்.

மர்மநபர் நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்துள்ளார். பீரோவில் இருந்த நகைகளை திருடியுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த லலிதாவின் கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பறித்து தப்பியோடினார்.லலிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சசிகுமாரால் மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. மர்மநபர் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in