நாகநதியில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடல் மீட்பு

நாகநதியில் கரை ஒதுங்கிய பெண்ணின் உடல் மீட்பு

Published on

ஆரணி அருகே கமண்டல நாக நதியில் பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது.

தி.மலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் கமண்டல நாகநதி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இந்நிலையில், ஆரணி அடுத்த காமக்கூர் கிராமம் வழியாக செல்லும் கமண்டல நாகநதி யில், சுமார் 50 வயது மதிக்கத் தக்க பெண் உடல் கரை ஒதுங்கி யிருந்தது நேற்று காலை தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணின் விவரம் தெரிய வில்லை. இதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in