கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் சரண்

கொலை வழக்கில் தொடர்புடைய  இளைஞர் சரண்
Updated on
1 min read

தூத்துக்குடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). சமீபத்தில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 4-வது நபராக தேடப்பட்டுவந்த இவர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் திருநாவுக்கரசு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஊத்துக்குளி போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in