கிருஷ்ணகிரியில் காணொலி மூலம் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் காணொலி மூலம் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(27-ம் தேதி) காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இன்று(27-ம் தேதி) காலை 10.30 மணியளவில் காணொலி முறையில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் கூட்டம் நடைபெறும்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள, தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்குச் சென்று அங்கிருந்து மாவட்ட ஆட்சியரகத்தை காணொலிக்காட்சி மூலமாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in