திருவண்ணாமலையில்கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில்கிரிவலம் செல்ல தடை
Updated on
1 min read

தி.மலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தாண்டு பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், தி.மலையில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் வரும் 28, 29-ம் தேதிகளில் வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தி.மலை எஸ்பி அரவிந்த் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தீபத்திருவிழாவை யொட்டி வரும் 29-ம் தேதி கோயிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் கிரிவலம் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

தீபத்திருவிழா அன்று வெளி யூர்களில் இருந்து தி.மலை நகருக்கு வருவதும் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. எனவே, வெளியூர் பக்தர்களும் பொதுமக்களும் தீபத்திருவிழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in