தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ளாற்றில் ஆய்வு

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வெள்ளாற்றில் ஆய்வு
Updated on
1 min read

'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்துக்கு அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புக் குழு வந்துள்ளன.

பரங்கிப்பேட்டை பகுதியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், நேற்று புவனகிரி வட்ட பகுதிக்கு உட்பட்ட தீர்த்தாம்பாளையம், பூவாலை, கொத்தட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆற்றோரம் குடியிருக்கும் பொதுமக்களிடம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினர்.

பின்னர் சி.முட்லூர் அருகே உள்ள வெள்ளாற்றை பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in