30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், விவசாயிகள் காலை 10 மணிக்குள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in