திருச்சியிலிருந்து கடலூர், நாகைக்கு அனுப்பப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்

திருச்சியிலிருந்து கடலூர், நாகைக்கு அனுப்பப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்
Updated on
1 min read

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு திருச்சி மாநகராட்சியில் இருந்து தலா 50 பேர் வீதம் தூய்மைப் பணியாளர்கள் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜோதிபாசு தலைமை யில் தூய்மைப் பணியாளர்கள் 50 பேர் கடலூர் மாவட்டத்துக்கும், சுகாதார ஆய்வாளர் பன்னீர் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் 50 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் தலா 2 பேருந்துகளில் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், பேருந்துகளை அனுப்பிவைத்தார். தூய்மைப் பணியாளர்களுடன் 2 மாவட்டங்களுக்கும் தலா 2 டிப்பர் லாரிகள், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் மற்றும் எலெக்ட்ரீசியன் கள் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in