பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் கிருஷ்ணகிரியில் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார்.

பழையபேட்டை முர்த்துஜாதெரு, மக்கான் தெரு, மில்லத்நகர் ஆகிய குடியிருப்பு பகுதி களில் வீடு வீடாகச் சென்று பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் புலம் பெயர்ந்து வரும் குழந்தைகள் குறித்து கணக் கெடுக்கும் பணிகள் நடந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in