கிணறு அமைக்க மானியம்

கிணறு அமைக்க மானியம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், விவசாய பயன்பாட்டுக்கான சமுதாய திறந்தவெளி கிணறு மானியத்தில் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவசாய நிலங்களில் இத்திட்டத்தின் கீழ் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிக்கான சான்று, ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை மற்றும் நிலவுடைமை உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

குறைவான நிலப்பரப்பினைக் கொண்ட விவசாயிகள் 3 பேர் குழுவாக இணைந்து, தங்களுக்குள் நீர் பங்கீடு குறித்து மேற்கொள்ளும் உறுதியான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.12.25 லட்சம் அரசு மானியத்தில் கிணறு அமைத்து தரப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in