2 ரேஷன் கடைகளை இடம்மாற்ற திட்டம்

2 ரேஷன் கடைகளை இடம்மாற்ற திட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி சிந்துபூந்துறையில் 2 ரேஷன் கடைகள் கட்டிடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டதால், 2 கடைகளையும் இடம்மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் மாநகராட்சியில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் தொடர் மழையால் இந்த ரேஷன் கடைகளில் மழைநீர் உள்ளே புகுந்து, அங்கிருந்த அத்தியாவசிய பொருட்கள் சேதமாயின. தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் அய்யப்பன் அந்த கடைகளை பார்வையிட்டார்.பின்னர் கடைகளை எதிரேயுள்ள மருத்துவமனை வளாகத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in