கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2-ம் நாள் உற்சவத்தில்விநாயகர், சந்திரசேகரர் பவனி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று விநாயகர் மற்றும் சந்திர சேகரர் உற்சவம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் 2-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது.

துர்க்கை அம்மன் உற்ச வத்துடன் தொடங்கிய தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடி யேற்றம் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதைய டுத்து, 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. அதன்படி, அண்ணாமலை யார் கோயில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் இரண்டாம் நாள் உற்சவம் நடைபெற்றது. விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் காலையிலும், பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் இரவும் நடைபெற்றது. இதில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று நடைபெற உள்ள 3-ம் நாள் உற்சவத்தில், 1,008 சங்காபிஷேகம் காலையில் நடைபெற உள்ளது. அதன்பிறகு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவம் நடைபெற உள்ளது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவு நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in