குழந்தைகள் தின ஓவியப் போட்டி வெற்றிபெற்றோருக்கு பரிசளிப்பு

விருதுநகரில் குழந்தைகள் தினவிழா ஓவியப் போட்டியில் வென்று பரிசு பெற்ற  மாணவ, மாணவிகளுடன் முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி,  அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர்.
விருதுநகரில் குழந்தைகள் தினவிழா ஓவியப் போட்டியில் வென்று பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுடன் முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் மே 18-ல் அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், கும்பகோணம் கவின் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர் சதீஷ் முதல் பரிசையும், விருதுநகர் சத்ரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்திரி இரண்டாம் பரிசையும், திருநெல்வேலி மாவட்டம் டி.கள்ளிக்குளத்தைச் சேர்ந்த ஜேசுஅருள் சுவேதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடந்த ஓவியப் போட்டியில் அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.தாமரைச்செல்வி முதல் பரிசையும், அதே பள்ளி மாணவி கீர்த்திகா மூன்றாம் பரிசையும், சிவகாசி லயன்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரவீன் இரண்டாம் பரிசையும் வென்றனர்.

h

விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவர் அஜய்தமிழ்ச்செல்வன், சிவகாசி எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் பள்ளி மாணவர் அரவிந்த் ஆகியோர் சிறப்புப் பரிசையும் வென்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in