பெண்ணைக் கொன்ற தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் சிறை

பெண்ணைக் கொன்ற தந்தை, மகனுக்கு இரட்டை ஆயுள் சிறை

Published on

செஞ்சி அருகே மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (70). இவரது மனைவி ராணி.இவர்களுக்கு முருகன் (38), சின்னதுரை (35) என இரு மகன்களும், இரு மகள்களும் உள்ள னர். மூத்த மகன் முருகன், குடும்பச் செலவுகளை ஏற்று, குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, முருகனுக்கும் சின்னத்துரைக்கு ம் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த 2013-ம்ஆண்டு ஆகஸ்ட் 19-ம்தேதி முருகன், தனக்கு பாகம் பிரித்த நிலத்தில் வேலை செய்து கொண்டி ருந்த போது, பெற்றோர் சுப்பிர மணி, ராணி ஆகியோர் முருகனை கத்தியால் குத்தியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி தனலட்சுமி ஓடிவந்து தடுக்க, அவரை குத்தி கொலை செய்தனர். முருகன் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு, நலமடைந்தார். முருகன் அளித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தினர் சின்னதுரை, சுப்பிரமணி, ராணி ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே ராணி இறந்து விட்டார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி நேற்றுதீர்ப்பளித்தார். அதில், சுப்பிரமணி, சின்னதுரை ஆகியோருக்கு கொலை, கூட்டு சதி பிரிவில் இரட்டை ஆயுள் தண்டனையும், கொலை முயற்சிக்கு 5 ஆண்டு கள் சிறை தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்துதீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, இருவரும் கட லூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.

இவ்வழக்கில் அரசுத் தரப் பில் வழக்கறிஞர் ராதிகா செந் தில் ஆஜரானார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in