88 அடியை எட்டியது சாத்தனூர் அணை

88 அடியை எட்டியது சாத்தனூர் அணை
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியது.

தென் பெண்ணையாற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் பரவ லாக மழை பெய்து வரு கிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. இதன்மூலம், திரு வண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர் கிறது.

அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீர் வரத்து உள்ளதால், 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 88 அடியை நேற்று எட்டியது. அணைக்கு விநாடிக்கு 578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

7,321 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில், 2,238 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் உள்ளது. சுமார் 30 சதவீதம் அளவுக்கு அணையில் தண்ணீர் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in