விருதுநகர் அருகே தொடர் மழையால் சரிந்து விழுந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் பகுதியில் தொடர் மழையால் சரிந்து விழுந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் பகுதியில் தொடர் மழையால் சரிந்து விழுந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்.
Updated on
1 min read

தொடர் மழையால் விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர். நகர் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சரிந்து விழுந்து சேதமடைந்தது.

தொடர் கனமழை காரணமாக மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர்- சாத்தூர் இடையே உள்ள ஆர்.ஆர் நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில், 2008-ம் ஆண்டு இன்டர்லாக் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள், 4 ஆண்டுகளுக்கு முன் மழையால் இடிந்து சரிந்து விழுந்தன.

தற்போது தொடர் மழையால் பாலத்தின் அதே பகுதி மீண்டும் இடிந்து சரிந்து விழுந்தது. அணுகு சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இப்பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக் குறியாகி உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in