வந்தவாசியில் 112 மி.மீ., மழை பதிவு

வந்தவாசியில் 112 மி.மீ., மழை பதிவு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வந்த வாசி பகுதியில் 112 மி.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், தி.மலையில் 33 மி.மீ., செங்கத்தில் 36.20, தண்டராம்பட்டில் 23.60, போளூரில் 23, ஆரணியில் 32.40, கலசப்பாக்கத்தில் 37, கீழ்பென்னாத்தூரில் 32.80, செய்யாறில் 25, சேத்துப்பட்டில் 33.60, வெம்பாக்கத்தில் 29.60, ஜமுனாமரத்தூரில் 28 மி.மீ., மழை பெய்துள்ளது.

இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 451 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் 119 அடி உயரம் உள்ள அணை யின் நீர்மட்டம் 87.20 அடியை எட்டியது. அணையில் 2,158 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 23.40 மி.மீ., மழை பெய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in