காளையார்கோவில் அருகேகாவிரி குழாயில் உடைப்பு

காளையார்கோவில் அருகேகாவிரி குழாயில் உடைப்பு
Updated on
1 min read

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்களில் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய 2009-ல் ரூ.617 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குடிநீரை அழுத்தத்துடன் கொண்டு செல்வதற்காக, காளை யார்கோவிலில் 10 லட்சம் லிட் டர் கொள்ளளவுள்ள மெகா மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து சிவகங்கை நகராட்சி பகுதிகளுக்குக் குடி நீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் காளையார் கோவில் அருகே அழகாபுரியில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி வருகிறது. தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் தரிசு நிலங்களில் பாய்ந்து வீணாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in