சசிகலா அண்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது விபத்தில் அமமுக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு

சசிகலா அண்ணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது விபத்தில் அமமுக ஒன்றிய செயலாளர் உயிரிழப்பு
Updated on
1 min read

சசிகலாவின் அண்ணன் மறை வுக்கு துக்கம் விசாரிக்க வந்தபோது, தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் கார் விபத்துக்குள்ளான தில் அமமுக ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியை அடுத்துள்ள மொட்ட னுத்து ஊராட்சி மன்றத் தலைவரும், அமமுகவின் ஒன்றிய செயலாளருமான கருப்பு என்கிற ராஜன்(44), சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் தேனியில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். காரை தேனியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் ஓட்டி வந்தார். இவர்களுடன் அமிர்தம், அமுசு ஆகியோரும் காரில் வந்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் தஞ்சாவூர்- திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே வந்தபோது, டயர் வெடித்ததில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் காரில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர்.

சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜனை பரிசோதித்த மருத்து வர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிடிவி.தினகரன் அஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in