வாலிநோக்கம் கடலில் மூழ்கி காரைக்குடி இளைஞர் மரணம்

வாலிநோக்கம் கடலில் மூழ்கி     காரைக்குடி இளைஞர் மரணம்
Updated on
1 min read

காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் வாலிநோக்கம் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தூருணியைச் சேர்ந்தவர் குமார். இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஷ்வா(20). இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் நேற்று காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரைக்கு குளிக்கச் சென்றார். அங்கு நண்பர்களுடன் குளித்தபோது கடல் அலையில் விஷ்வா இழுத்துச் செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் மீட்டு வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே விஷ்வா உயிரிழந்தார். இதுகுறித்து வாலிநோக்கம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in