துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது சிறுபனையூர் தக்கா கிராமம்.

இங்குள்ள பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் ஹாரூண்(40). இவரது தந்தை சையத் ஹனீப் பெயரில் உரிமம் பெற்ற நாட்டுத் துப்பாக்கி வீட்டில் இருந்துள்ளது. ஹாரூண் மன நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஹாரூண் தனது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து, வீட்டுக்கு முன் தாழ்வாரத்தில் அமர்ந்தவாறு துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஷான்பாஷா (45) என்பவர், அந்த வழியாக செல்லும்போது ஹாரூண் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், குண்டு பாய்ந்து ஷான்பாஷா உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in