இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் பணம் திருட்டு

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் பணம் திருட்டு
Updated on
1 min read

போச்சம்பள்ளியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மூக்கம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து (48). ஊத்தங்கரையில் மின்பாதை ஆய்வாளராக இவர் பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில் புதிதாக வீடு கட்டியுள்ளார்.

அப்போது வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த நேற்று தன் மனைவி ஜோதியுடன் போச்சம்பள்ளி சென்றார். அங்குள்ள தேசிய மய வங்கியில் 7 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.1.75 லட்சம் பணம் பெற்றார். அந்த பணம் வைக்கப்பட்ட பையை தன் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டியில் வைத்திருந்தார்.

பின்னர் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் உள்ள ஜவுளிக் கடைக்கு சென்றார். கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டி உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந் தார். பெட்டியில் பார்த்த போது பையுடன்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக, போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார்.

அதன்பேரில், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in