திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
Updated on
1 min read

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார். நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலாளர்கள் மாரி முத்து, ரமேஷ், சரவணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர், “தமிழ கத்தில் மதவாத பாஜக வேர் ஊன்ற முடியாது. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரால் கட்டிக்காத்த திராவிட மண்ணில், திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு வாக்குச்சாவடி முகவர்களிடம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட் டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க உறுதி ஏற்போம்” என்றார்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினர் கிரி, மாநிலமருத்துவர் அணி துணை தலை வர் கம்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in