லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

ராஜா
ராஜா
Updated on
1 min read

கடலூர் முதுநகர் சராங்கு தெருவில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மின்னல் ராஜா (48) என்பவரை கடந்த மாதம் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குணசேகரன் மற்றும்போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின்குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி குண்டர் சட்டத்தில் ராஜாவை கைது செய்ய உத்தரவிட்டார். கடலூர் சிறையில் இருந்த ராஜாவிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in