அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளியில் குழந்தைகள்  புத்தக வாரவிழா நடைபெற்றது.
அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ பள்ளியில் குழந்தைகள் புத்தக வாரவிழா நடைபெற்றது.

எஸ்எம்ஏ பள்ளியில் குழந்தைகள் புத்தக வாரவிழா

Published on

பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி மற்றும் எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகள் புத்தக வார விழா போட்டிகள் இணையவழியில் நடைபெற்றது. ‘வாசிப்பே வழிநடத்தும்’ என்ற மையக்கருவுடன்நடைபெற்ற விழாவுக்கு பள்ளிமுதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு இணையவழி சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பாகிரதி, கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in