திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை

திருமணமான 4 மாதங்களில் பெண் தற்கொலை
Updated on
1 min read

சிதம்பரம் அருகே உள்ள இடையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (23).ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும் காட்டுமன் னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூர் கீழதெருவைச் சேர்ந்த முருகன் மகள் சுவேதா (20) என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. சுவேதா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார்.

கடந்த மாதம் 27-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுவேதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருத்தை குடித்து மயங்கி விழுந்தார். புதுச் சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க, அவர் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.

போலீஸார் சந்தேக மரண சட்டப்பிரிவுன் படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவேதாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in