குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அம்பாசமுத்திரம் காக்கநல் லூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சரவண அய்யப்பன் (27). அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரைத்தார். ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின்பேரில் சரவண அய்யப்பன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in