கீழக்கரையில் வியாபாரி கொலை

கீழக்கரையில் வியாபாரி கொலை
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தட்டான் தோப்பைச் சேர்ந்தவர் தவசிமுனி (52), சங்கு வியாபாரி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சேகருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை தவசிமுனி தட்டான்தோப்பில் உள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த சேகர், தவசிமுனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த தவசிமுனியை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in