தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாதங்களில் 76 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில்  10 மாதங்களில் 76 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி  தேஷ்முக் சேகர் சஞ்சய் தகவல்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 மாதங்களில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 76 பேர் கைது செய்யப்பட்டனர் என மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நவ.9-ம் தேதி வரை குற்றச் செயலில் ஈடுபட்டதாக 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 1,332 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்றதாக 132 பேரும், லாட்டரி சீட்டுகள் விற்றதாக 197 பேரும், குட்கா உள்ளிட்ட புகை யிலை பொருள்கள் விற்றதாக 642 பேரும், மது விற்றது உள்ளிட்டவை தொடர்பாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 4 பேர் உட்பட 4,293 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 76 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை யில் அடைக்கப்பட்டனர். இவர்க ளில் 27 பேர் ரவுடிகள் என தெரி வித்தார். பின்னர், அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்குப் பின், அவரது மகனுடன் தொடர்பு உள்ளவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கேட்ட போது, ‘‘சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எஸ்.பி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in