மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
Updated on
1 min read

செய்யாறில் நடைபெற்ற சிறப்புமுகாமில் 350 மாற்றுத் திறனாளி களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங் கும் முகாம் தி.மலை மாவட்டம்செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். முகாமில் 884 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில்,350 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக அடையாள அட்டை மற்றும் 101 மாற்றுத்திறனாளிக ளுக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த முகாமில் செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், கோட்டாட்சியர் விமலா, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவ லர் சரவணன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in