அரசாணைப்படி ஊதியம் வழங்கக்கோரி ராமநாதபுரத்தில் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணைப்படி ஊதியம் வழங்கக்கோரி  ராமநாதபுரத்தில் தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அரசாணைப்படி ஊதியம் வழங்கக்கோரி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணையின்படி சிறப்பு ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய மாற்றத்தின்படி ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.குமார், உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அய்யாத்துரை, துணைத் தலைவர் எஸ். கணேசமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in