கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.

மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் எழுதிய ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்க காலம் விருதுநகர் மாவட்டத்தின் விதைகள் வேர்கள் விழுதுகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்நூலை, மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் வெளியிட, கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காகப் பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இந்த நூல் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டராமன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சுகந்தி, மகாலட்சுமி ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in