தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்ட துணைச் செயலாளர் எம்.குமார், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அய்யாத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணையின்படி சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதிய மாற்றத்தின்படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in