சாலை விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு

சாலை விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் வேட்ட வலம் அடுத்த கெங்கப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் அண்ணாமலை. இவரது மனைவி பாப்பையம்மாள்(30). இவர், 6 மாத கர்ப்பிணியாக இருந்துள் ளார்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி கருங்கல்பட்டு கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணாமலை சென்றுள்ளார். கருங்கல்பட்டு கிராமம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், தி.மலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பையம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in