திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 634 பேர் மனு

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்ற தி.மலை ஆட்சியர் கந்தசாமி.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்ற தி.மலை ஆட்சியர் கந்தசாமி.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 634 பேர் மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். உதவித் தொகை மற்றும் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 634 பேர் மனு அளித்தனர்.

மேலும், தொலைபேசி மூலமாக 54 அழைப்புகளும், வாட்ஸ் -அப் வழியாக 34 கோரிக்கைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in