9 கிலோ கஞ்சா பறிமுதல்: சூடான் இளைஞர் மீது வழக்குப்பதிவு

9 கிலோ கஞ்சா பறிமுதல்: சூடான் இளைஞர் மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

சிதம்பரம் அருகே கஞ்சா கடத் தலில் ஈடுபட்ட சூடான் நாட்டு இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் வழியாக கஞ்சாகடத்தப்படுவதாக அண்ணாமலைநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸபெக்டர் தேவேந் திரன், சப்-இன்ஸ்பெக்டர் கண பதி மற்றும் போலீஸார் நேற்று முத்தையாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த ஒருகாரை போலீஸார் நிறுத்தினர். காரை நிறுத்திய வெளிநாட்டு இளைஞர் ஓடிவிட்டார்.

போலீஸார் காரை சோதனைசெய்ததில், பொட்டலங்களாக மொத்தமாக 9 கிலோ கஞ்சா இருந் தது தெரியவந்தது. காரையும், கஞ்சா பொட்டலங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

விசாரணையில், காரில் கஞ்சாவை கடத்தியது தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பென்னி ஜான் பிலிப் என்பதும், அவர் அண் ணாமலைநகர் பகுதியில் தங்கி யுள்ளதும் தெரியவந்தது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in