தூய்மை பணியாளருக்குபுத்தாடைகள், இனிப்பு எம்எல்ஏ வழங்கினார்

தூய்மை பணியாளருக்குபுத்தாடைகள், இனிப்பு எம்எல்ஏ வழங்கினார்
Updated on
1 min read

ராஜபாளையம் தொகுதியில் கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் 1,021 பேருக்கு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ 4 மாத ஊதியத்தில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் புத்தாடை, இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கரோனா காலத்தில் தொற்று பரவாமல் இருக்க உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணி புரிந்த முன்களப் பணியாளர்களுக்கு நன்றி என்றார். நிகழ்ச்சியில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சிங்கராஜ், திமுக நகர் செயலாளர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in