நெல்லை உட்பட தென்மாவட்டங்களில் ஒரே நாளில் 80 பேர் கரோனாவால் பாதிப்பு

நெல்லை உட்பட தென்மாவட்டங்களில்  ஒரே நாளில் 80 பேர் கரோனாவால் பாதிப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 6, அம்பாசமுத்திரம், பாளையங் கோட்டை, வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடு வட்டாரங்களில் தலா ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 33 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,327 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 25 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 14,812 பேர் குணமடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 7,891 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் குணமடைந்தார். இதுவரை மொத்தம் 7,666 பேர் குணமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,157 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 14,628 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in