குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூ ருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவரது அண்ணன் மகேஷ் மகள் ஹரிணி(14). இவர்களது குடும்பத்தினர், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, தி.மலை மாவட்டம் வேட்டவலத்துக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், வேட்டவலம் பெரியார் தெரு அருகே உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க நேற்று சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராமல் குட்டையில் இருந்த தண்ணீரில் ஹரிணி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற சுரேஷும் தண்ணீரில் விழுந்து இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வேட்டவலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in