பைக் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

செங்குன்றம் அடுத்த காட்டூர் அமிர்தாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் தனது நண்பர்கள் பழனி, கணேசனுடன் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கிச் சென்றார். அப்போது லாரி ஒன்று கண்ணதாசனின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் கணேசன் உயிரிழந்தார். கண்ணதாசன், பழனி இருவரும் பலத்த காயத்துடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார். இது தொடர்பாக சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in