கண்மாய் நீரை திருப்பிவிட எதிர்ப்புகாரியாபட்டி அருகே சாலை மறியல்

கண்மாய் நீரை திருப்பிவிட எதிர்ப்புகாரியாபட்டி அருகே சாலை மறியல்
Updated on
1 min read

காரியாபட்டி அருகே உள்ள ராம்பூர் கிராமத்தில் உள்ள கண்மாய் நீரை அருகில் உள்ள முடுக்கன்குளம் கண்மாய்க்குத் திருப்பும் வகையில் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கு காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார் ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி அவரைக் கண்டித்தும், கண்மாய் நீரைத் திருப்பிவிட எதிர்ப்பு தெரிவித்தும் ராம்பூர் கிராம மக்கள் காரியாபட்டி- நரிக்குடி சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காரியாபட்டி வட்டாட்சியர் தனக்குமார், காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு ஏற்படாததால் கிராம மக்கள் சாலை மறியலைத் தொடர்ந்தனர். பின்னர் மாலையில் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெறும் என்று வட்டாட்சியர் தனக்குமார் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in