ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம்

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
Updated on
1 min read

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் 171 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் மனுக்களை பெற்றனர். மொத்தம் 171 மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 10 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 8 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையும், 53 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் என மொத்தம் 74 பயனாளிகளுக்கு ரூ.2.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in