ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி ஆய்வு

ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் கோவை சரக டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.
Updated on
1 min read

கோவை காவல் சரகத்தில் உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் நேற்று காலை கோவை சரக டிஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடந்த ஆண்டு பதிவான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்த கோப்புகளை ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வர் விருதுக்கு கோவை சரகத்தில் ஈரோடு டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி நரேந்திரன் நாயர் தெரிவித்தார். ஈரோடு எஸ்பி தங்கதுரை, ஏடிஎஸ்பி பொன். கார்த்திக்குமார், டிஎஸ்பி ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in