நீட் தேர்வுக்காக 15 ஆயிரம் பேருக்கு பயிற்சி: அமைச்சர்

நீட் தேர்வுக்காக 15 ஆயிரம் பேருக்கு பயிற்சி: அமைச்சர்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:

பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் கருத்துகேட்புக் கூட்டம் நடக்கவுள்ளது. பெற்றோர் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம். பெற்றோர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, அதன் அடிப்படையில் முதல்வர் முடிவு எடுப்பார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதில் 15,492 பேர் பயிற்சி பெறவுள்ளனர். கூடுதலாக மாணவர்கள் சேர்ந்தால் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in