காஞ்சி, செங்கையில்52 பட்டாசு கடைகளுக்கு அரசு அனுமதி

காஞ்சி, செங்கையில்52 பட்டாசு கடைகளுக்கு அரசு அனுமதி
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளிக்கு பட்டாசுகடைகள் வைக்க 52 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிகளை முறையாக பின்பற்றாத 19 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தும், முறையான வருமானம் இல்லாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த ஆண்டு பட்டாசுகடைகள் வைக்க கோரி வந்தவிண்ணப்பங்களில் விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6, செங்கல்பட்டு மாவட்டத்தி்ல் 13 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2 மாவட்டங்களிலும் சேர்த்து52 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றிலும் விற்பனை மந்தமாகவே உள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட 40% விற்பனை குறைவாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in