தி.மலை கோயிலில் ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை

தி.மலை கோயிலில்  ரூ.42 லட்சம் உண்டியல் காணிக்கை
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமிக்கு பிறகு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமிக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

அண்ணாமலையார் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.42,40,099 மற்றும் 163 கிராம் தங்கம், 456 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in