யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு வன அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம் வனத் தோட்ட மண்டல அலுவலகத்தை அரியலூர் மாவட்ட காங்குழி கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் வனத் தோட்ட மண்டல அலுவலகத்தை அரியலூர் மாவட்ட காங்குழி கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் காங்குழி கிராமத்தில், விருத்தாசலத்தில் உள்ள அரசு வனத்தோட்ட மண்டல அலுவலகம் மூலம் யூகலிப்டஸ் மர கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. யூகலிப்டஸ் மரங்கள் வளர்ந்தால், அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் காங்குழி கிராம மக்கள், விருத்தாசலம் அரசு வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் யூகலிப்டஸ் மரக் கன்றுக்கு பதிலாக முந்திரி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in