விழுப்புரத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
Updated on
1 min read

கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக கிடைத்த தகவலின் பேரில்விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை விழுப்புரத்தில் சோதனை நடத்தினர். கஞ்சா விற்பனை செய்த விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த விஜய்(30), பாலாஜி (31), இளம்வழுதி (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3.900 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேதுரா மன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வழுதரெட்டி பகுதியில் சோதனை நடத்தியதில், கஞ்சா விற்பனை செய்த வெங் கட்ராமன் (22) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in