செந்துறையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பேரணி

செந்துறையில்  ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பேரணி
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. கரோனா ஊரடங்கின்போது, ஆட்டோ ஸ்டாண்ட் இருந்த இடத்திலும் சிறு சிறு சாலையோர கடைகள் உருவாகின.

தற்போது, அந்த கடைகளை காலிசெய்ய மறுப்பதால் ஆட் டோக்களை நிறுத்த இடவச தியில்லை என ஆட்டோ ஓட்டு நர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சாலையோர கடைகளை அகற்றக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தினர் நேற்று பேரணியாக சென்று வட்டாட்சியர் முத்து கிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in